Friday, May 14, 2021

Today reader, tomorrow a Leader

Reading... a vacation for the mind.... are you ready to spend 5 minutes to read this article? If yes, we can talk about ‘reading’ in this page. Please check yourselves for the question “how many books or articles you have read in the past 12 months?”  I can ensure that the answer for this question is definitely will rely on smart phones, because the recent research says that, in a day an adult spends more than 2 ½ hours with his/her Smartphone (Charles, 2018). There are arguments that, people are reading and listening more with the help of social media. However, who can ensure that there is any completeness in reading or listening from the social media?

“A reader should imagine what he is reading, understand what is argued in the text he is reading, comprehend the liaison between the thoughts in it, organise them by comparing with what he has accumulated so far, restructure his present knowledge with what he has read, and sort out what he wants to keep in his mind” (Abdulkerim and Remzi, 2015). This is possible only if the reader interprets, evaluates and adopts a critical attitude while he is reading.

The big question for all of us is how to set our mind for reading? The easiest way is, to start reading subjects that are related to our interests.  Every time we decide to read a book, prior to commencing reading, do a simple research about the book. Otherwise, if the book is not interesting, then we will not complete the book. For example, if the book is translated from another language and the art of translation is poor then our interest on reading the book will be lost.  If you are a parent, when you are reading in front of your children, they will also learn from you. It is really important for children to read books. It is tough to teach kids to read books without us setting an example for them. Please make a home library which will motive them to read books.

After reading what can we do? Take a paper and write a brief note about the books you read and publish them on your social networks, which will motivate not only you but also others to read books. There are various advantages in  reading, such as reading develops the mind and reduces stress, reading boosts enhances our memory and our ability to focus, it improves our vocabulary and communication skills etc. Our brain is a muscle and like our body it also needs exercise to stimulate it. In short, reading books is a medicine for a reader.

All of us know that leaders are not only good speakers but also good readers. It means, today’s reader is tomorrow a leader. The some book lovers are quoted their experience on reading as follows “sleep is good, he said, and books are better”, “we read to know we're not alone”, “reading brings us unknown friends”.

References:

Abdulkerim Karadeniza, Remzi Canb (2015). A research on book reading habits and media literacy of students at the faculty of education. Elsevier, 4058-4067

Charles Hymas, (2018). A decade of smartphones: We now spend an entire day every week online [online]. The Telegraph, 02 August, last accessed 02 March 2019 at: https://www.telegraph.co.uk/news/2018/08/01/decade-smartphones-now-spend-entire-day-every-week-online/

Piotr Kowalczyk (2013). The many benefits of reading (infographic) [online]. Last accessed 04 December 2019 at: https://ebookfriendly.com/benefits-of-reading-infographic/?utm_content=buffer569cc&utm_medium=social&utm_source=twitter&utm_campaign=buffer

PS: The above content is prepared for Toastmasters Level 1 Project 3 under an Innovative Planning path.

Saturday, September 2, 2017

புரியாத புதிர்

நேற்று பார்த்த திரைப்படம் விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்த மற்றொரு புதையல் 'புரியாத புதிர்'. படத்தின் முன்னோட்டத்தை (Trailer) பார்த்தால் அது ஒரு பேய் படமா என தோன்றவைத்தது. ஆனால் அதை தாண்டி ஒரு சிறந்த கதைக்கருவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இயக்குனர் கையாண்டிருக்கிறார்.




அது எதுவெனில் 'கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஒளி-ஒலி சாதனம்' (Phone-Camera). பொதுவாக தமிழ் திரை வரலாற்றில் ஒரு சில படங்களே காலம் தாழ்த்தி வெளிவந்து வெற்றிபெற்றன. உதாரணமாக அஜீத் நடித்த 'வரலாறு' மற்றும் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு'. ஆனால்  'புரியாத புதிர்' இரண்டு வருடம் கழித்து மிகச் சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது. ஏனெனில்  தற்போதுதான் சமூக வலைத்தள பாவனையாளர்களை கொலைப்பயத்துக்குளாக்கிய நீலத்திமிங்கிலம் (Blue Whale) என்ற விளையாட்டின் விபரீதம் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு தெரியவந்துள்ள அதே வேளையில்,  இயக்குனர் கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஒளி-ஒலி சாதனத்தால் ஏற்பட்ட விளைவை மிகச் சிறப்பாக பார்வையாளர்களை திரைக்கதையுடன் இழுத்துச் சென்றுள்ளார். நிச்சயமாக இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்து இக்கதையின் கருவை கொண்டு பல சிந்தனைகளுடன் அனைவரும் செல்வது உறுதியே.

அண்மையில் கூட அஜீத்தின் விவேகம் திரைப்படம் பல தொழில்நுட்பவியல் விடயங்களை (Hologram Imaging, Mobile Signal Jamming,Morse Code, Reverse Hacking & Tracking with Pacemaker) எமக்கு திரை போட்டுக்காட்டினாலும் பலரிடம் அது ஒட்டவில்லை, ஏனெனில் பார்வையாளர்களுக்கு பரிச்சயம் குறைந்தவை என்பதாலும் பார்வையாளர்களை கதை தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்றால் சரி போல் உள்ளது.

மொத்தத்தில் 'புரியாத புதிர்' புரிதல்கள் வேண்டி

Friday, February 24, 2017

வெளுவெமீர் கால்வாய்ப்பாலம்' (Veluwemeer Aqueduct)

கட்டுமானப் பணிகள் காலத்துக்குக் காலம் புதிய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் கட்டட விற்பன்னர்களால் அமைக்கப்பட்டு வருகின்றமை கட்டுமானத்துறையில்அதிக முதலீட்டாளர்களை கவர்ந்ததிழுக்கச் செய்கின்றது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பறைசாற்றி நிற்பது கட்டிடங்களும் தெருக்களுமே. அதேபோல் பொருளாதார வீழ்ச்சியால் முதலில் பாதிக்கப்படும் துறையாக கட்டுமானப் பணிகள் காணப்படுகின்றன. பொதுவாக பின்தங்கிய இடங்களை அபிவிருத்தி செய்யவேண்டுமெனில் முதலில் சிறந்த முறையில் வீதிகள் இடப்பட வேண்டும், என்பது பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையே. இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது எல்லா நாட்டிலும் காணப்படுகின்ற மிக முக்கிய பிரச்சனை. அது ஒரு சுனாமி போன்று எப்போதும் உருவாகலாம் என்ற நிலையே அனைத்து இடங்களிலும். போக்குவரத்து நெரிசல்களுக்கு முக்கிய காரணம் என்னவெனில் நாடொன்றில், அதிகரிக்கின்ற வாகன இறக்குமதி அல்லது உற்பத்தி செய்யப்படுகின்ற வீதத்துடன் வீதிகளின் விஸ்தரிப்புகள் அதிகரிக்கப்படுவதில்லை.


கட்டுமானத்துறையுடன் தொடர்புபட்ட திருக்குறளை தேடியபோது 'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்' என்ற குறள் கீழே உள்ள கட்டுரையுடன் பொருந்தி செல்வதை அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. தரப்பட்ட குறளுக்கு 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவரான மு. வரதராசன் அவர்களின் உரை பின்வருமாறு 'மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்'.


சாதாரணமாக ஒரு கட்டிடத்தையோ வீதியையோ அமைக்கும்போது முதலில் புவிசார் காரணிகள் பரிசோதிக்கப்பட்டே அதற்குரிய அனுமதி குறிப்பிட்ட மாநகரசபையாலோ அல்லது பிரதேச சபையால் வழங்கப்படும். இன்றைய காலகட்டத்தில் பாலங்கள் என்பது வீதி நிர்மாணங்களின் போது முக்கிய கட்டமைப்பாக காணப்படுகின்றது. அந்தவகையில் 'வெளுவெமீர் கால்வாய்ப்பாலம்' (Veluwemeer Aqueduct) ஆனது உலகில் பாலங்கள் கட்டுமானத்துறைக்கு ஒரு மைல்கல்லாக இருக்கின்றது. இக்கால்வாய்ப்பாலமானது நெதர்லாந்தின் கிழக்கு ஹார்டெரவிஜிக் (Harderwijk) எனும் பகுதியில் வீதி இலக்கம் N302 இல் அமைந்துள்ளது. இக்கால்வாய்ப்பாலமானது நியூஸிலாந்தின் முக்கிய நிலப்பகுதிகளையும் உலகிலே மனிதனால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைத்தீவான பிளேவோலன்ட் (Flevoland) ஐயும் இணைக்கின்றது. இச்செயற்கைத்தீவை சுற்றி மனிதனால் உருவாக்கப்பட்ட மூன்று (3) கடனீரேரிகள் உள்ளன. இந்த மிகப்பெரிய செயற்கைத் தீவானது, மேற்குறிப்பிட்ட  பிளேவோலன்ட் (Flevoland) மற்றும் நூரடூஸ்ட்போல்தேர் (Noordoostpolder)  செயற்கைத் தீவுகளை உள்ளடக்கியதும் ஆகும். இவற்றின் மொத்த நிலப்பரப்பு 970 சதுர கிலோமீட்டர்கள்.


பொறியியலாளர்களும் கட்டிடக்கலைஞர்களும் (Architect) இணைந்து குறைந்த செலவில் மிகவிரைவில் பூர்த்தியாகக் கூடியவகையிலும் சுற்றுச்சூழலின் விரிந்து கிடக்கும் பரந்த அழகை அவ்வாறே ஆரார்த்தி இருக்கத்தக்கதாக இந்த கால்வாய்ப்பாலத்தை அமைத்துள்ளனர். பொறியியலாளர்கள் ஒரு மேம்பாலத்தையோ (Fly Over Bridge) அல்லது ஒரு சுரங்கப் பாதையையோ அமைத்திருக்கலாம் அல்லது முன்மொழிந்திருக்கலாம். ஆனால் அவை அதிக பண செலவுகளையும் அதிக நேரம் தேவையாகவுள்ள திட்டமாக இருந்திருக்கும். இந்த  கால்வாய்ப்பாலமானது எந்த ஒரு சாதனையையும் பதியவில்லை. ஆனாலும் உலகிலுள்ள சிறிய கால்வாய்ப் பாலங்களில் இதுவும் ஒன்று.







Monday, January 16, 2017

MGR's 100th Birthday

It won’t be a contested if one says MGR is the only actor in the world who has more devotees than mere fans. MGR's 100th Birthday (17-Jan).

Thursday, January 12, 2017

மிகப் பெரிய சாதனைகளையும் ஒரு சிறு புன்சிரிப்புடன் தாண்டிச் செல்லும் இசைப்புயல்

1994 ஆம் ஆண்டுகளில் சைக்கிளில் தைனமோ பூட்டி-சுத்தி முக்காலா முக்காப்பிலா மற்றும் ஊர்வசி பாடல்களை திரும்பத் திரும்பத் பலதடவை கேட்டிருப்போம். ஆனால் அப்போது யார் இசை அமைப்பாளர், பாடியவர்கள், கவிஞர், ஒலி-பொறியியலாளர் (Sound Engineer)  என்றெல்லாம் சிந்தித்தது கிடையாது. ஆனாலும் அந்த பாடல் மயக்கம் 23 வருடங்கள் கழிந்தும் எம்மை கட்டிப்போட்டுள்ளது    என்றால் மிகையல்ல. அதற்கு நல்ல உதாரணம் சிலவேளைகளில் வீதியில் செல்லும்போது, அப்பாடல்கள் சில கடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். பின்னர் நாம் வீடு வந்த பின்னர் அப்பாடலை மீண்டும் கேட்டிருப்போம். 'ரோஜா' முதல் இறுதியாக வந்த 'அச்சம் என்பது மடைமையடா' வரை எல்லாமே கேக்க கேக்க பிடிக்கும் வகையறாக்கள். இசையை மாத்திரமல்லாது தமிழ் மொழியையும் உலகிற்கு எடுத்துச் சென்றவர் ரஹ்மான்.

அநேகமான இசை மேதைகளை பார்த்தால் அவர்களிடத்தில் ஆன்மீக சக்தி (Spiritual Power) ஒன்று அவர்களிடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும், உதாரணமாக மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ரஹ்மான். இளையராஜா ஒரு இசை திமிர் பிடித்த மனிதர். சில இடங்களில் தன்னை பெருமை பேசும் விதமாக இசை செய்வார். ஆனால் அவர் அவ்வாறு செய்வதில் தவறு இல்லை. ஏனெனில் அவர் 100 வீதம் தனது சொந்த இசை அறிவையே பயன்படுத்தி இருப்பார் தனது பாடல்களில். அவரது பாடல்கள் எவ்வாறு எமது வாழ்க்கையோடு இன்றியமையாதது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் சொன்னால், "இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளில் சில பாடல்கள் ஒலிக்கையில் ரசிகர்களின் கண்ணிலிருந்து கண்ணீர் ஒழுகும்". இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை எத்தனை இசை மேதாவிகள் தமிழ் திரைஉலகத்துக்கு வந்தாலும் ராஜா என்றென்றும் ராஜாதான், மாற்றுக் கருத்தில்லை.
பணிவு என்ற சொல்லை நான் அறிவேன் ஆனால் அதை நேரடியாக பார்த்து முதலில் வியர்ந்தது என்னுடன் வேலை செய்த ஒரு மூத்த கணிய அளவியலாளர். அவர் தனது துறையில் ஏறத்தாழ 30 வருடத்திற்கும் அதிக அனுபவம் உடையவர் ஆனாலும் அனைவரையும் மதிப்பது மட்டுமல்லாது தனது அனுபவத்தை விட வயது குறைந்த என்னைப் போன்றவர்களுடனும் எந்தவிதமான சஞ்சலங்களும் (Ego Problem)  இன்றி முழு ஈடுபாட்டுடன் வேலை செய்வார். திரை உலகில் உள்ளவர்களில் பணிவின் சிகரம் என்றால் ரஹ்மான்தான் இருக்க முடியும் என்று நம்புகின்றேன். திரை உலகின் உச்ச வெற்றியாக கருதப்படும் ஆஸ்கார் இரண்டை ஒருவாயில் பெற்றாலும் திருவாய் மறந்து கூட தன்னைப் பற்றி பெருமை கூறியது கிடையாது.  சாதனைகளின் சொந்தக் காரன் சாதாரண மனிதனாக வாழ்கின்றமை வியப்புக்குரியதே. அநேகர்அவனை” விழிப்பது ஒரு கலாச்சாரத்துக்கே, ஆனால் ரஹ்மான் போன்ற ஒரு சிலர் தான் சொல்லும் சொல்லுக்கேற்ப "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று வாழ்கின்றனர். தமிழைப் பற்றி தப்பட்டை அடிப்பவர்களுக்கு மத்தியில் ஒரு ஓடும் தூய நதியாக தனது வெற்றியை தமிழில் பதிவு செய்தார் மேலை நாட்டவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் மத்தியில்.

என்னதான் மிகப் பெரிய சாதனைகளையும் ஒரு சிறு புன்சிரிப்புடன் தாண்டிச் செல்லும் இசைப்புயல். அத்துடன் எனக்கு அடிக்கடி தோன்றுகின்ற விடயம் யாதெனில் ரஹ்மான் போன்ற சாதனையாளர்கள் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற வேளையில் இவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? எதைப் பற்றி சிந்திப்பார்கள்?...

ரஹ்மானுக்கு அடியேனின் 50 ஆவது பிறந்த தின (06 தை) (பிந்திய) வாழ்த்துக்கள்.


இக்கட்டுரையை எழுதி முடிக்கையில் இணையத்தில் கிடைத்த செய்தி ஒன்று, இவர் சோமாலியாவில் 3000 வருடங்கள் பழமை வாய்ந்த சில இசைக்கருவிகளை வாங்கியதாகவும் அவற்றின் விலைகள் மிகக் குறைவாக இருந்தது. காரணம் என்னவென்ற போது அங்கே தலைவிரித்தாடும் வறுமை என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனாலும் ரஹ்மான் மிகப் பெரிய தொகையை அந்நாட்டு அரசே வியக்கும் வகையில் கொடுத்து உதவியுள்ளதாக.

இசைப்புயலின் சில ஞாபகங்கள்